வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் ஆலய வரலாற்றினை குறிக்கும் முகமாக அமைக்கப்பட்டிருந்த கல்வெட்டு நேற்று (17.04.2016) வைபவரீதியாக வவுனியா பிரதேச செயலாளர் உதயராசாவினால் காலை 10.30மணியளவில் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.
மேலும் ஆலய பிரதம குருவினால் மாவட்டச்செயலாளருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.இந்நிகழ்வில் ஆலய நிர்வாக உறுப்பினர்கள் ஆச்சாரியார்கள், மற்றும் ஐயனார்பக்தர்கள் சூழ்ந்திருந்தனர்.