மர்மமாக காணாமல் போயுள்ள 17 வயதான மாணவி!!

595

Missing

எல்பிட்டிய -இஹல ஓமத்த திகல கனேகொட பிரதேசத்தை சேர்ந்த 17 வயதான பாடசாலை மாணவி ஒருவர் கடந்த ஒரு மாதமாக காணாமல் போயுள்ளதாக தெரியவந்தள்ளது.

கடந்த மாதம் 13ம் திகதியில் இருந்து தமது மகளை காணவில்லை என பெற்றோர் தெரிவித்துள்ளனர். இது குறித்து பெற்றோர் எல்பிட்டிய மற்றும் ஊரகஹா பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இது தொடர்பாக பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் மாணவியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

எனினும் குறித்த சம்பவம் தொடர்பாக எந்த முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.