
வவுனியா சிதம்பரபுரம் நலன்புரி முகாமில் கடந்த முப்பது வருடங்களாக தங்கியிருந்த 194 குடும்பங்களுக்கு நாளைய தினம் (19.04.2016) தற்காலிக காணி உரிமைப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன.
இதன்படி ஒவ்வொரு குடும்பத்துக்கும், 60 பேர்ச் காணித் துண்டுகள் வழங்கப்படவுள்ளன. இப் பகுதி மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வடமாகாணசபை ஏற்கனவே, 13.5 மில்லியன் ரூபாவை, வவுனியா பிரதேச செயலகத்துக்கு வழங்கியுள்ளது.
வவுனியா சிதம்பரபுரம் நலன்புரி முகாம் கடந்த முப்பது வருடங்களாக இயங்கி வருகின்றதுடன், இந்த முகாமில் பல ஆண்டுகளாக வசித்து வந்த மக்களுக்கே, அந்தப் பகுதிக் காணிகள் பிரித்துக் கொடுக்கப்படவுள்ளன.





