
மது போதையில் வாகனம் செலுத்துபவர்களைக் கைதுசெய்ய மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் தற்போது வரை 1710 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 164 பேர் இவ்வாறு கைதாகியுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இவர்களில் பெரும்பாலானவர்கள் மோட்டார் சைக்கிள் சாரதிகளாகும்.
நேற்று மாத்திரம் 78 மோட்டார் சைக்கிள் சாரதிகள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், முச்சக்கர வண்டி சாரதிகள் 62 பேர், கார் சாரதிகள் 14 பேர் மற்றும் வேன் சாரதிகள் 07 பேரும் இவ்வாறு கைதாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
பண்டிகைக் காலங்களில் மது போதையில் வாகனம் செலுத்துபவர்களைக் கைதுசெய்ய பொலிஸாரால் கடந்த 10ம் திகதி முதல் நாடு முழுவதும் விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





