தெற்கு அதிவேகப் பாதையில் மூன்று நாட்களுக்குள் மட்டும் மூன்று கோடி வருமானம்!!

518

Road

தென்னிலங்கை அதிவேகப் பாதையில் புத்தாண்டு தினத்தை ஒட்டிய மூன்று நாட்களுக்குள் மட்டும் மூன்று கோடி ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மூன்று நாட்களுக்குள் மட்டும் ஐந்து லட்சத்தி ஐம்பத்தி ஏழாயிரத்து 23 வாகனங்கள் தெற்கு அதிவேகப் பாதையில் பயணித்துள்ளது.

ஏப்ரல் 15ம் திகதி மட்டும் ஒரேநாளில் ஒருகோடியே 70 லட்சம் ரூபா தெற்கு அதிவேகப் பாதையின் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது.

அதிவேகப் பாதை வருமானத்தில் இது ஒரு சாதனையாகும். பொதுவான நாட்களின் வருமானத்தை விட 34 வீத வருமான அதிகரிப்பாகும்.

புத்தாண்டு காலப்பகுதியில் மட்டும் அதிவேகப் பாதையில் 100க்கும் அதிகமான வாகனங்கள் எஞ்சின் கோளாறு காரணமாக இடைவழியில் செயலற்று நின்று போயிருந்த நிலையில் அவற்றை பாதையை விட்டு அகற்றுவது பெரும் திண்டாட்டமாகிப் போயுள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் புத்தாண்டு காலப்பகுதியில் இம்முறை மிகவும் குறைவான விபத்துக்களே பதிவாகியுள்ளது.

சுமார் 25 விபத்துச் சம்பவங்கள் மட்டுமே இம்முறை நடைபெற்றிருந்ததுடன், 2 பேர் அதன் காரணமாக காயமுற்றிருந்தனர்.

அதிலும் பெரும்பாலான விபத்துக்கள் வாகனங்கள் ஒன்றையொன்று முந்திச் செல்ல முற்படும் போது வலது புறமாக தாண்டிச் சென்று குறுகிய தூரத்திற்குள்ளாக மீண்டும் இடது பக்கமாக முறையற்ற வகையில் வழித்தடத்தை எட்ட முயன்ற போது நேர்ந்துள்ள விபத்துக்களாகும்.

அதிவேகப் பாதையில் ஒரே ஒருநாள் மட்டும் சுமார் 300 மீட்டர்கள் வரையான வாகன வரிசையொன்று உருவாகி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதன் போது வாகன வரிசைகளை நாடிச் சென்று வரி அறவிடப்பட்டதன் காரணமாக குறுகிய நேரத்திற்குள் போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்துக் கொள்ள முயன்றதாக அதிவேகப் பாதை செயற்பாட்டு முகாமையாளர் சமன் ஒபனாயக தெரிவித்துள்ளா