வவுனியா கோவில் புளியங்குளத்தைச் சேர்ந்த அரசியல் கைதியாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவரின் குடும்ப நிலை தொடர்பில் ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்ட கலைமகள் நற்பணி மன்றத்தின் தலைவர் தபாலச்சந்திரன் சிந்துஜன் அவர்கள் குறித்த குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்து இது தொடர்பில் முகநூல் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்துலண்டனைச் சேர்ந்த நல்லுள்ளம் கொண்ட புலம்பெயர் தமிழர் ஒருவரின் உதவியுடன் குறித்த குடும்பத்திற்கான சுயதொழிலுக்குரிய கோழி வளர்ப்பதற்கான கூடு, கோழிகள் மற்றும் விவசாயத்திற்கான ஊக்குவிப்புக்கள் என்பன குறித்த நிர்மலாதேவியின் குடும்பத்திற்கு அண்மையில் சித்திரைப் புதுவருட தினத்தன்று கலைமகள் நற்பணி மன்றத்தின் தலைவர் பாலச்சந்திரன் சிந்துஜனால் வழங்கி வைக்கப்பட்டது.
அவ்வகையில் இவ்விடயத்தை தமக்கு வெளிப்படுத்திய ஊடகங்களுக்கும் ஊடகத்துறை நண்பர்களுக்கும் அவ்வுதவியினை வழங்கிய லண்டனைச் சேர்ந்த குறித்த நண்பருக்கும் கலைமகள் நற்பணி மன்றத்தின் சார்பில் பாலச்சந்திரன் சிந்துஜன் தனது மனப்பூர்வமான நன்றியினை தெரிவித்தார்.






