வவுனியாவில்அரசியல் கைதியின் குடும்பத்திற்கு கலைமகள் நற்பணி மன்றத்தினால் வாழ்வாதார உதவி!!

622

 
வவுனியா கோவில் புளியங்குளத்தைச் சேர்ந்த அரசியல் கைதியாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவரின் குடும்ப நிலை தொடர்பில் ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்ட கலைமகள் நற்பணி மன்றத்தின் தலைவர் தபாலச்சந்திரன் சிந்துஜன் அவர்கள் குறித்த குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்து இது தொடர்பில் முகநூல் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்துலண்டனைச் சேர்ந்த நல்லுள்ளம் கொண்ட புலம்பெயர் தமிழர் ஒருவரின் உதவியுடன் குறித்த குடும்பத்திற்கான சுயதொழிலுக்குரிய கோழி வளர்ப்பதற்கான கூடு, கோழிகள் மற்றும் விவசாயத்திற்கான ஊக்குவிப்புக்கள் என்பன குறித்த நிர்மலாதேவியின் குடும்பத்திற்கு அண்மையில் சித்திரைப் புதுவருட தினத்தன்று கலைமகள் நற்பணி மன்றத்தின் தலைவர் பாலச்சந்திரன் சிந்துஜனால் வழங்கி வைக்கப்பட்டது.

அவ்வகையில் இவ்விடயத்தை தமக்கு வெளிப்படுத்திய ஊடகங்களுக்கும் ஊடகத்துறை நண்பர்களுக்கும் அவ்வுதவியினை வழங்கிய லண்டனைச் சேர்ந்த குறித்த நண்பருக்கும் கலைமகள் நற்பணி மன்றத்தின் சார்பில் பாலச்சந்திரன் சிந்துஜன் தனது மனப்பூர்வமான நன்றியினை தெரிவித்தார்.

10151262_1705064459727658_9171517290872185062_n 12391314_1705064476394323_2115137418433295293_n 12592376_1751545705079533_2135605924214471420_n 12987164_1751549215079182_6975758023172412270_n 13000253_1751549271745843_5084767419801208_n 13000298_1751545671746203_7601669639694435279_n 13012803_1751545625079541_1850718963146719021_n 13012822_1751545591746211_7752459405705779594_n 13015358_1751549231745847_2550198617300464685_n 13015429_1751549248412512_8688202698588994890_n