வவுனியாவில் வசந்தகாலத்தை நினைவூட்டும் வீதியோர மரங்கள் பாதுகாக்கப்படுமா?

747

1

வவுனியாவில் வசந்தகாலத்தை நினைவூட்டும் வீதியோரம் பூத்துக் குலுங்கும் பல மரங்கள் வீதி அபிவிருத்தியைக் காரணம்காட்டி இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டன. மிகுதியாக இருப்பது நீதிமன்ற வளாகத்திற்க்கு முன்னால் உள்ளது. மற்றையது வலயக் கல்வி அலுவலகத்திற்க்கு முன்னால் உள்ளது மட்டுமே. தற்போது அவை இரண்டும் பூத்துக் குலுங்குகின்றன.

அழிக்கப்பட்ட மரங்களுக்கு ஈடாக எந்த ஒரு இடத்திலும் மரக்கன்றுகள் நாட்டப்படவும் இல்லை.வவுனியா பஐார் வீதி மற்றும் புகையிரத நிலைய வீதி தற்போது காப்பெற் இடப்பட்டு வீதி அகலப்படுத்தும் பணிகள் இடம் பெறுகின்றன. இருந்தும் மின்சாரத் தூண்கள் வீதியில் இடையூறாக நிற்கும் நிலையில் நிழல் தரும் மரங்கள் அகற்றப்படுகின்றமை வேதனை அளிக்கிறது.

பஜார் வீதியில் நிழலில் ஓதுங்கி இளைப்பாற ஓரு இடத்தில் கூட மரம் இல்லை. இவ்விடயத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள், நகரசபையினர், சூழலியலாளர்கள் கவனத்திலெடுப்பார்களா?

எமது வடமாகாண சபையின் சுற்றுச்சூழல் அமைச்சருக்கு ஓரு சிறிய விண்ணப்பம் A9 வீதியின் இருமருங்கிலும் இந்திய தமிழ் நாட்டில் உள்ளதைப் போன்று பயன்தரு மரங்களை நாட்டினால் இதனால் விளையும் பயன்கள் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

இவ்விடயங்கள் சம்பந்தப்பட்டவர்களை சென்றடைய முடியுமானவரை பகிருங்கள்.

-கார்த்தீபன்-

2