ஆதிவாசிப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவனை அடித்துக் கொன்ற மக்கள்!!

825

aathi

அசாம் மாநிலம் தென்கான் என்ற இடத்தை சேர்ந்தவன் மிதுதாஸ் (வயது 23). கார் மெக்கானிக். இவன் கடந்த மாதம் அந்த பகுதியை சேர்ந்த ஆதிவாசி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தான். இதுபற்றி பொலிசில் புகார் செய்யப்பட்டது. பொலிசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால், அவனை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இது ஆதிவாசி பெண்ணின் உறவினர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இதனால் 50க்கும் மேற்பட்டடோர் திரண்டு வந்து மிதுதாசை கடுமையாக தாக்கினார்கள். அப்போது அங்கு 3 பொலிசார் இருந்தனர். கும்பல் அதிகமாக இருந்ததால் அவர்களால் தடுக்க முடியவில்லை. மிதுதாசை அரிவாளாலும் வெட்டினார்கள். அதில் ஏற்பட்ட காயத்தில் உப்பை கொட்டினார்கள். இதனால் வலி தாங்காமல் மிதுதாஸ் துடித்தான்.

பொலிசார் அவனை மீட்டு அரசு வைத்தியசாலையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தான். பொலிசார் முன்னிலையிலேயே குற்றவாளி தாக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாலியல் பலாத்கார குற்றவாளி மீது பொலிசார் முதலிலேயே உரிய நடவடிக்கை எடுக்காததால் தான் இந்த சம்பவம் நடந்ததாக ஊர் மக்கள் கூறினார்கள்.