வவுனியாவில் 40 மில்லிகிராம் ஹேரோயின் வைத்திருந்த நபர் கைது!!

719

Arrest

வவுனியா தாண்டிக்குளத்தில் 40 மில்லிகிராம் ஹேரோயின் வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் வைத்து 40மில்லி கிராம் ஹேரோயினை ஒருவரிடமிருந்து வாங்கிக் கொண்டு வந்தபோது வவுனியா, மன்னார், முல்லைத்தீவு பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவல் அடிப்படையில் குறித்த நபரிடம் சோதனை மேற்கொண்டபோது 40மில்லி கிராம் ஹேரோயின் பொதியினை தன்வசம் வைத்திருந்த 45வயதுடைய வவுனியா தேக்கவத்த பகுதியைச் சேர்ந்த நபரைக் கைது செய்துள்ளதாகவும்,

விசாரணையின் பின்னர் வவுனியா பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் விசாரணையின் பின்னர் இன்று வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாகவும் வவுனியா போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.