மார்பகங்களைக் காட்டி செல்பி எடுத்த பெண் பொலிஸ் அதிகாரி கடமையிலிருந்து இடைநிறுத்தம்!!

387

Nidia-Garcia

வித்தியாசமான முறையில் செல்பி எடுத்து முகப்புத்தகத்தில் தரவேற்றிய பெண் பொலிஸ் அதிகாரியை கடமையிலிருந்து இடை நிறுத்திய சம்பவமொன்று மெக்ஸிக்கோவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண் பொலிஸ் அதிகாரி காரொன்றிலிருந்தவாறு மேலாடையில்லாது தனது இரு மார்பகங்களையும் காட்டியவாறு செல்பி எடுத்து தனது முகப்புத்தகத்தில் தரவேற்றியுள்ளார்.

நிதியா கார்சியா என்ற பெண் பொலிஸ் அதிகாரி பொலிஸ் சீருடையுடன் குறித்த செல்பியை முகப்புத்தகத்தில் தரவேற்றியதனாலேயே அவர் கடமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

இது குறித்து பெண் பொலிஸ் அதிகாரி நிதியா கார்சியா தெரிவிக்கையில்,

பொலிஸ் அதிகாரி சீருடை அணிந்தவாறு நான் புகைப்படம் எடுத்தமை தவறானதாகுமம். கீழ்த்தரமான செயலுக்காக மன்னிப்புக் கேட்கின்றேன். இந்த செயலால் எனது இரு பிள்ளைகள், கணவன், பெற்றோர், சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினர் என்னில் வெறுப்படைந்துள்ளதை நான் உணர்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.