வவுனியாவில் பெற்றதாயை கூட்டில் அடைத்து வைத்த மகன் : பொலிசில் முறைப்பாடு!!

562

download (1) copy

வவுனியா சாந்தசோலை கிராமத்தில் 95 வயதான பெற்றதாயை கூட்டில் அடைத்து வைத்துள்ளதாக வவுனியா பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்படுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

வவுனியா சாந்தசோலைக் கிராமத்தில் வசித்துவரும் மகன் தனது தாயை 5 வருடங்களாக கூட்டில் அடைத்து வைத்ததாக பொதுமகன் ஒருவரால் வவுனியா பொலிசாரிடம் முறைப்பாடொன்று செய்யப்பட்டது.

இவ்விடயம் தொடர்பாக சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் தாயை மீட்டதுடன் அவரை வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இச் சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்துக்கு விரைந்த எமது செய்தியாளர், இச் சம்பவத்துடன் தொடர்புடையவருடன் வினாவிய போது எனது தாயை நான் கொடுமைப்படுத்தவில்லை எனவும் அவரை தான் 5 வருடங்களாக நல்லமுறையில் பராமரித்து வந்ததாகவும் வவுனியா பொலிசாரிடம் தவறான முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.