சிறையில் 2000 தடவை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட திருநங்கை!!

291

Abuse

அவுஸ்திரேலியாவில் திருநங்கையை ஒருவரை சிறையில் வைத்து 2000 தடவை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

அவுஸ்திரேலியா நாட்டை சேர்ந்த திருநங்கையான மேரி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 1990 ஆண்டில் கார் திருடிய வழக்கில் கைதாகி அவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதையடுத்து அவர் க்வீன்ஸ்லேண்டில் உள்ள போக்கோ ரோடு ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட சில மணிநேரங்களில் இருந்து தண்டனைக் காலம் முடியும் வரை அவர் சுமார் 2000 முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அவர் சிறை தண்டனை அனுபவித்த காலத்தில் பல சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதை பற்றி திருநங்கை மேரி தெரிவிக்கையில்,

நான் சிறையில் இருக்கையில் 2000 முறை பலாத்காரம் செய்யப்பட்டேன். திருநங்கையான என்னை ஆண்கள் சிறையில் அடைத்தனர். என்னை பெண்கள் சிறையில் அடைத்திருக்க வேண்டும். சிறையில் பிற ஆண் கைதிகள் என்னை மிரட்டி மிரட்டியே பலாத்காரம் செய்தனர். என்னால் அவர்களை எதிர்க்க முடியவில்லை.

பலாத்காரம் செய்ததோடு மட்டும் அல்லாமல் என்னை அடித்து துன்புறுத்தினர். நான் சிறையில் நரக வேதனை அனுபவித்தேன். நாங்களும் மனிதர்கள் தானே. எங்களுக்கு பிடித்த வகையில் வாழ்வதை இந்த சமூகம் கிண்டல் செய்கிறது. எங்களுக்கு பிடித்தபடி வாழ எங்களுக்கு துணிச்சல் உள்ளது என்றார்.