இரவு நேரப் பணியில் ஈடுபடும் ஆண்களை விட பெண்களுக்கு மூளைப் பாதிப்பு அதிகம்!!

399

Lady

இரவு நேரப் பணியில் ஈடுபடும் ஆண்களை விட பெண்களுக்கு மூளை பாதிப்பு அதிகம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பெண்களின் மூளை செயற்திறன் ஆண்களைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. ஆனால், இரவுப் பணியில் ஈடுபடுவதால் நுண்ணறிவார்ந்த செயற்திறன் பலவீனமடையும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

வேலை நேரத்தில் ஏற்படும் மாற்றம் ஆண்கள் மற்றும் பெண்களின் செயற்திறனை வெவ்வேறு விதமாகப் பாதிக்கின்றது.

இது அறிவாற்றல் பற்றாக்குறை மற்றும் மன நிலையில் மாற்றம் ஆகியவற்றை ஏற்படுத்துகின்றது என்று சர்ரே பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் நயன்தாரா சாந்தி கூறியுள்ளார்.

ஆராய்சியாளர்கள் 18 பெண்கள் மற்றும் 16 ஆண்களை 28 மணித்தியாலம் சூரிய ஒளி இல்லாமல் அறையில் வைத்து ஆய்வில் ஈடுபடுத்தினர்.

அவர்களின் மூளை செயற்பாடுகள் சாதாரண பணி சூழலில் இருப்பவர்களை விட குறைவாக இருப்பதாகக் கூறினர்.
தேசிய அறிவியல் அகாடமி பத்திரிக்கை வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் இரவுப் பணியில் ஈடுபடும் பெண் செவிலியர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள், தொழிலாளர்களுக்கு மூளை செயற்திறனில் குறிப்பிடத்தக்க தாக்கங்கள் ஏற்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.