2018இல் மின்தட்டுப்பாடு ஏற்படலாம்!!

251

Electricity

2018ம் ஆண்டில் மின்சாரத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக, மின் சக்தி பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.

இதன்படி, 500 மெகாவோட் மின்சாரத்துக்கு இவ்வாறு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதுஎவ்வாறு இருப்பினும் அதற்கு முகம் கொடுப்பது தொடர்பில் தற்போது அவதானம் செலுத்தியுள்ளதாகவும், சூரிய சக்தியில் இயங்கக் கூடிய மின் உற்பத்தி நிலையங்கள் மூன்றை கிழக்கு மாகாணத்தில் நிறுவ எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார்.