வவுனியாவில் இளங்கோ அடிகளின் சிரார்த்த தின நிகழ்வுகள்!!

241

 
வவுனியாவில் இளங்கோ அடிகளின் சிரார்த்த தின நிகழ்வுகள்!!வவுனியா சின்னப்பதுக்குளம், சிவன் கோவிலுக்கு அருகிலுள்ள இளங்கோ அடிகளின் சிரார்த்த தினமான சித்திராப் பெணர்னமி தினத்தன்று அன்னாரின் சிரார்த்த தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருவதை முன்னிட்டு அன்னாரின் அதிருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தியதுடன் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.சீனிவாசன் அவர்களினால் அன்னாரின் நினைவுப் பேருரை நிகழ்த்தப்பட்டது.

இந்நிகழ்வில் முன்னாள் உப நகர பிதாவும், இளங்கோ அடிகளின் திருவுருவச் சிலையினை நிறுவியவருமான க.சந்திரகுலசிங்கம், மாவட்ட கிராம நிர்வாக உத்தியோகத்தர் எம்.விஜயரட்ணம், மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன், நகர வரியிறுப்பாளர் சங்கம், தமிழ் விருட்சம் அமைப்பித் தலைவருமான எஸ்.சந்திரகுமார் செயலாளர் மாணிக்கம் ஜெகன், தமிழ்த் தேசிய இளைஞர் கழகத் தலைவர் சு.காண்டீபன், செயலாளர் கேசவன், பொருளாலர் நிகேதன், அமைப்பாளர் பிரதீபன், கலைமகள் நற்பணிமன்றத் தலைவர் பா.சிந்துஜன், சிவன் கோவில் நிர்வாகத்தினர், சிவன் சிறுவர் இல்ல சிறுவர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்த கொண்டனர்.

DSC03160 DSC03179 DSC03181 DSC03187