தாதிக்கு மர்ம உறுப்பை காட்டியவர் கைது!!

657

Arrest1

தாதியொருவருக்கு தனது மர்ம உறுப்பை காட்டிய நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த நபர் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பண்டாரகம ரைகம பிரதேசத்தைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதியே, தனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் தாதிக்கு, இவ்வாறு மர்மஉறுப்பை காண்பித்துள்ளார்.

குறித்த சாரதி, தனது வீட்டுக்கு முன்பாக முச்சக்கரவண்டியை நிறுத்திவைத்துவிட்டு, அதிகமான சத்தத்துடன் தினமும் பாடலை ஒலிபரப்பி வந்துள்ளார்.

இதனடிப்படையில், அந்த தாதி பொலிஸில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த முறைப்பாட்டில் சாரதி, இவ்வாறான தேவையில்லாத செயற்பாட்டில் ஈடுபட்டதாகவும் அவர் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்