5,000 கோடி வரி செலுத்தாத மெக்டொனால்ட் உணவகம் மீது அரசு அதிரடி நடவடிக்கை!!

566

Mcdonalds

பிரான்ஸ் நாட்டில் செயல்பட்டு வரும் மெக்டொனால்ட் தனியார் நிறுவனம் சுமார் 5,000 கோடி ரூபாய் வரை வரி செலுத்தாமல் உள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் ஜேர்மனிக்கு அடுத்ததாக 1,300 ’மெக்டொனால்ட்(McDonald) உணவகங்களை கொண்டு பிரான்ஸ் நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது.

ஆனால், ஐரோப்பிய நாடுகளிலேயே ஆண்டுக்கு சுமார் 4.4 பில்லியன் யூரோ(73 ஆயிரம் கோடி இலங்கை ரூபாய்) வரை இந்த உணவகம் பிரான்ஸில் விற்பனை செய்து வருகிறது.

மேலும், கடந்த 2009 ஆண்டு வரை இந்த நிறுவனம் பிரான்ஸில் நாட்டில் சுமார் 10,000 வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தியும், சுமார் 1.2 பில்லியன் யூரோவை பிரான்ஸ் அராசங்கத்திற்கு வரியாக செலுத்தியுள்ளதாக நிறுவனமே அண்மையில் செய்தி வெளியிட்டது.

இந்நிலையில், சுமார் 300 மில்லியன் யூரோ(49,86,11,49,000 இலங்கை ரூபாய்) வரை மெக்டொனால்ட் வரி செலுத்தவில்லை என்றும், அந்த வரியை உடனடியாக செலுத்த வேண்டும் என்றும் அரசாங்கம் கடந்தாண்டு உணவகத்துக்கு உத்தரவிட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

இது குறித்து மெக்டொனால்ட் நிறுவனத்திடம் செய்தியாளர்கள் பேசியபோது, ‘பிரான்ஸ் நாட்டில் அதிக வரி செலுத்தும் நிறுவனங்களில் மெக்டொனால்ட் நிறுவனமும் ஒன்று’ என தெரிவித்துள்ளது.

ஆனால், அரசாங்கம் உத்தரவிட்டுள்ள செலுத்தப்படாத வரி தொகையை பற்றி அந்த நிறுவனமும் எந்த கருத்தும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.