வவுனியாவில் வேலைக்குச் சென்ற 19 வயது யுவதியைக் காணவில்லை!!

553

Missing

வவுனியாவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் யுவதி வேலைக்குச் செல்வதாக கூறி விட்டுச் சென்று இதுவரை வீடு திரும்பவில்லை என்று வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் வசித்து வந்த குறித்த19 வயது யுவதி நேற்று முன்தினம் (19.04.2016) பிற்பகல் தனியார் நிறுவனத்திற்கு வேலைக்குச் செல்வதாக கூறிவிட்டுச் சென்ற நிலையில் இதுவரை வீடு திரும்பவில்லை என வவுனியா பொலிஸ் நிலையத்தில் நேற்று (20.04.2016) தாயார் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த யுவதி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும் அந்நிறுவனத்திற்கு வேலைக்குச் செல்வதாக கூறிவிட்டுச் சென்றதாகவும் முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.