
இலங்கையின் மனித உரிமைகள் துறையில் குறிப்பிடத்தகக்க முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக பிரித்தானியா மற்றும் பொதுநலவாய அமைப்பு அலுவலகம் கூறியுள்ளது. மனித உரிமைகள் தொடர்பாக வௌியிடப்பட்டுள்ள வருடாந்த அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் நாட்டிற்குள் ஊடக சுதந்திரம் உட்பட கருத்துச் சுதந்திரத்தை உறுதி செய்வதற்காக நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் சமூகத்தில் குழுக்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு சிறந்த செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதுடன், மனித உரிமைகள் ஆணைக்குழு போன்ற நிறுவனங்களின் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரித்தானியா மற்றும் பொதுநலவாய அமைப்பு அலுவலகம் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் சாதகமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.
2015ம் ஆண்டின் பின்னர் இந்த சிறந்த போக்கு இலங்கைக்குள் இருப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த ஆண்டிற்குள் மனித உரிமைகள் விடயத்தில் மேலும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்காக மேலும் பல நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட வேண்டும் என எதிர்பார்ப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.





