
புத்தளம்- மஹா கும்புக்கடவல பகுதியில் இரட்டைக் குழந்தைகளை துஷ்பிரயோகப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தில் 14 வயதுடைய இரண்டு பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சந்தேக நபர் அதே பிரதேசத்தை சேர்ந்த 41 வயதுடையவர் எனவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பாதிக்கப்பட்ட பெண்களின் தாயார் வெளிநாடு ஒன்றில் தொழில் புரிவதாகவும், தந்தை இவர்களை கைவிட்டு சென்றுள்ளதால் பாட்டியுடன் வாழ்ந்து வந்ததாகவும் அவ் வேளையிலேயே குறித்த சம்பவம் நடந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சந்தேக நபர் கைது செய்யப்பட்டு புத்தளம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





