
சிவகார்த்திகேயன் ரெமோ படத்தில் பிஸியாக நடித்து வருகின்றார். இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க கே.எஸ்.ரவிக்குமாரை அனுகியுள்ளனர்.அவரும் இப்படத்தில் நடிக்க சம்மதிக்க, அவருக்கான காட்சிகள் தினமும் எடுக்கப்பட்டு வருகின்றது.
இதில் அவருக்கு தினமும் இவ்வளவு சம்பளம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதில் ஒரு நாள் நடித்து முடித்தவுடன் அவர் கையில் சம்பளம் கொடுக்க, நான் 3 மணி நேரம் தானே நடித்தேன், பாதி சம்பளம் போதும் என கூறி கிளம்பிவிட்டாராம். இதைக்கண்ட சிவகார்த்திகேயன் இந்த காலத்தில் இப்படி ஒரு நபரா என்று ஆச்சரியத்தில் டுவிட் செய்துள்ளார்.





