நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் பிற்பகலில் மழை!!

583

Malai

வளிமண்டலத்தின் உட்புற மாற்றத்தால் நாட்டைச் சூழவுள்ள அனைத்துப் பாகங்களிலும் இன்று(22.04) பிற்பகல் வேளையில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல மாகாணங்களிலும் குறிப்பாக 2.00 மணிக்குப் பின்னர் மழை பெய்யும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன் சில பிரதேசங்களில் மழை வீழ்ச்சியின் அளவு 50 மில்லிமீற்றரைத் தாண்டலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக மேல் மாகாணம், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

அத்துடன் மேல் மற்றும் தென் கடலோரங்களில் காலை வேளையில் மழைக்கான சாத்தியம் நிலவுகின்றது எனவும் இடியுடன் கூடிய மழையின் போது அவதானமாக இருக்குமாறும் வானிலை அவதான நிலையம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.