வவுனியா குட்செட் வீதியில் இன்று (23.04.2016) காலை கைக்குண்டு மற்றும் அடையாள அட்டை ஒன்று வவுனியா பொலிசாரினால் மிட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வவுனியா குட்செட் வீதி அமைதி அகத்திற்கு அருகே காணப்படும் சிறிடெலோ இளைஞர் அணியின் தலைவரின் இல்லத்திற்கு முன்பாக காணப்படும் மதகிக்கு அருகே சிறிய பையினுள் சந்தேகத்திற்கு கிடமான பொருள் ஒன்று காணப்படுவதாக பொலிசாருக்கு தெரிவித்தமையை அடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து அந்த சந்தேகத்திற்கு கிடமான பையினை திறந்தபொழுது கைக்குண்டு மற்றும் அடையாள அட்டை ஒன்றும் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை
கடந்த சில வாரங்களாக வடக்கு மாகாணத்தில் தற்கொலை அங்கி மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






