முல்லைத்தீவு சந்தையில் ஒரு கிலோ மீன் 400 ருபாய் : மக்கள் கவலை!!

997

FIsh

பெரும்கடல் வளத்தைக்கொண்டுள்ள முல்லைத்தீவு நகரில் மீன் விலை அதிகமாக காணப்படுகின்றது. இதனால் வறுமைக்கோட்டின் கீழ்வாழும் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

பெண்தலைமை தாங்கும், 7 அங்கத்தவரை கொண்ட ஒரு குடும்பத்துப் பெண் இன்று காலை 400 கிராம் மீனை 160 ருபாய் விலை கொடுத்து வாங்கிச்சென்றதை அவதானிக்க முடிந்தது.

இது தொடர்பாக குறித்த பெண்ணிடம் வினவியபோது, தங்கள் குடும்பத்தில் 4 சிறியவர்களும் ஒரு முதியவரும், அடங்குகின்றார்கள்.

400கிராம் மீனை துண்டுகளாக வெட்டினால் 50 கிராம் கழிவாகிவிடும். மீதி 350 கிராம் மீன்துண்டுகளை பகிர்ந்துண்பதாகவும், ஆடைகள் தைப்பதன் மூலம் ஒரு நாளைக்கு சராசரி 250 ருபாய் வருமானத்தை தான் பெற்றுக்கொள்வதாகவும் அவர் கவலையுடன் குறிப்பிட்டுள்ளார்.