பொலிஸாரின் காதைக் கடித்த நபர் தப்பியோட்டம்!!

629

Pol

மஹியங்கனை – சேனார பிரதேசத்தில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட மதுபான நிலையத்தை முற்றுகையிடச் சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவரின் காதை நபர் ஒருவர் கடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பொலிஸாரின் காதை கடித்த நபர் தப்பியோடி உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் கூறியுள்ளன.

தப்பியோடிய சந்தேக நபரினை தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், சட்டவிரோத மதுபான மோசடி தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.