
திருகோணமலை – மனையாவெலி பகுதியில் 600 கிலோகிராம் எடையுள்ள இராட்சத திருக்கை மீன் ஒன்றை மீனவர்கள் பிடித்துள்ளார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த திருக்கை மீன் நேற்று பிடிப்பட்டுள்ளதாக மேலும் அறியமுடிகின்றது. இதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னரும் இவ்வாறான பெரிய மீன் ஒன்று பிடிப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





