
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, கைவேலி மருதமடு குளத்தில் குளிக்கச்சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இன்று மதியம் ஒரு மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
2ம் வட்டாரம், கைவேலி புதுக்குடியிருப்பில் வசித்தவரும் தற்போது புளியம் பொக்கனையில் வாழ்ந்து வருபவருமாகிய யோகேஸ்வரன் முரளிதரன் (வயது 32) என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.





