
டெங்கு நோய் தடுப்பூசியை இலங்கையில் பயன்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரான்ஸில் டெங்கு நோய்க்கு எதிரான ஊசி மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது, இந்த ஊசிமருந்து இலங்கையில் பயன்படுத்த முடியுமா, பொருந்துமா என்பது குறித்து ஆராயப்படவுள்ளது.
இது தொடர்பில் ஆய்வு செய்யுமாறு தொற்று நோய் தடுப்பு பிரிவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுகாதார மற்றும் போசாக்கு அமைச்சர் ராஜித சேனாரத்ன இது குறித்து பணிப்புரைவிடுத்துள்ளார்.
இந்த ஊசி மருந்து, உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளமைகுறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு இந்த மருந்து பொருத்தமாக இருந்தால் அதனை தேசிய மருந்து பொருள் தரநிர்ணயஅதிகாரசபையினால் பதிவு செய்யுமாறு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
சுகாதார அமைச்சின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.





