
12 வயது பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக கூறப்படும் மூவரை காத்தான்குடி பொலிசார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
இதன்படி, சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றத்தின் பேரில் ஒருவரும் அவருக்கு உதவிய குற்றச்சாட்டின்பேரில் இருவருமாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பாடசாலையில் ஏழாம் வகுப்பில் கல்வி பயிலும் இச் சிறுமி தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





