கடும் நெருக்கடியில் விஜய் மல்லையா : கடவுச்சீட்டு முடக்கம்!!

939

Mallaia

விஜய் மல்லையாவின் கடவுச்சீட்டு முடக்கப்பட்டு பிணையில் வரமுடியாத பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கூடுதல் தொகையை வங்கிகளுக்கு கொடுக்க முன்வந்துள்ளார்.

கிங் பிஷர் விமான நிறுவனத்தின் நிறுவனரான விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி கடன் பெற்று திருப்பி செலுத்தவில்லை.

தற்போது லண்டனில் வசித்து வரும், அவரைநேரில் ஆஜராகி விளக்கம் அளிக்ககோரி, அமலாக்கத்துறை 3 முறை சம்மன் அனுப்பியது. மல்லையா இதுவரை ஆஜராகவில்லை.

வங்கிகள் தொடர்ந்த வழக்கில் மல்லையாவுக்கு மும்பை சிறப்பு நீதிபதி பிடியாணை பிறப்பித்துள்ளார். இந்நிலையில் மல்லையாவின் கடவுச்சீட்டை வெளியுறவு அமைச்சகம் இன்று முடக்கி, திரும்பபெற்றுக் கொண்டுள்ளது.

எனவே அவர் கடவுச்சீட்டு இனிசெல்லாது என அத்துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறியுள்ளார். இதுகுறித்து விகாஸ் மேலும் கூறியதாவது,

ரூ. 9,000 கோடி கடனை திருப்பிசெலுத்தாமல் இங்கிலாந்தில் உள்ள விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு அழைத்து வந்து சட்டநடவடிக்கைகளை எதிர்கொள்ள வைக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதற்காக பல்வேறு அமைப்புகளோடு ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறோம். மேலும் அமலாக்கத்துறை கடிதம் பற்றி பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு சட்ட நிபுணர்களோடு ஆலோசித்து வருகிறோம் என கூறியுள்ளார்.

இதுகுறித்து விஜய்மல்லையா கூறியதாவது, என்னுடைய கடன்களை பேசித்தீர்க்க நான் தயாராகவே இருக்கிறேன். ஆனால் என்னுடைய கடவுச்சீட்டை முடக்கம் செய்வது எனக்கு எதிராக பிணையில் வர முடியாத பிடி ஆணைபிறப்பிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் இருக்கும் சூழ்நிலையில் பேச முடியாது.

தற்போது 6,868 கோடி ரூபாயை வங்கியில் செலுத்த இருக்கிறேன் என கூறியுள்ளார்.