
திருமணத்தின் போது பொலிசாரால் கைது செய்யப்பட்ட மணமகன், தப்பிவந்து அவசர அவசரமாக மணமகள் கழுத்தில் தாலிகட்டிய சம்பவம் நடந்துள்ளது.
ஜனார்தன்- சுமலதா ஜோடிக்கு திருமலையில் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால்,கடைசி நேரத்தில் மண்டபத்திற்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் ஜிலானி என்பவர், மணமகன் பத்மா என்ற பெண்ணைக் காதலித்து ஏமாற்றியதாகக் கூறி வலுக்கட்டாயமாக துப்பாக்கி முனையில் மணமகனை காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல முயன்றார்.
வராவிட்டால் என்கவுன்டர் செய்துவிடுவதாக காவல் உதவி ஆய்வாளர் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. மணமகனுடன் புறப்பட்ட காவலரின் வாகனத்தை மறித்த உறவினர்கள், அதில் இருந்து ஜனார்த்தனை போராடி மீட்டனர்.
இதையடுத்து, அங்கிருந்து மணமகள் அறைக்கு வேகமாக ஓடிச் சென்ற ஜனார்தனன், அங்கேயே மணமகள் சுமலதாவுக்கு தாலி கட்டி விட்டார்.
பணம் பறிக்கவே காவல் உதவி ஆய்வாளர் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறி தன்னை கைதுசெய்ய முயன்றதாக ஜனார்தனன் புகார் தெரிவித்தார்.
இந்தப் பிரச்சனைகள் முடிந்தபிறகு இருவருக்கும் இடையே முறைப்படி திருமணம் நடைபெற்றது.
இந்த சம்பவம் குறித்துகாவல் துறை எஸ்ஐ ஜிலானி கூறியதாவது,தன்னை காதலித்து வந்த மணமகன் ஜனார்தன் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக அவருடையதாய் மாமன் மகள் புகார்செய்தார்.
அதனால்தான் நாங்கள் அவரை கைதுசெய்ய வந்தோம். திருமணத்தை நிறுத்தி விசாரிக்கவே நாங்கள் வந்தோம். ஆனால்அவர் எங்களது பிடியிலிருந்து தப்பிஓடி மணமகள் ஹேமலதாவின் கழுத்தில்தாலி கட்டி விட்டார். இனிநடவடிக்கை எடுப்போம் என்று கூறியுள்ளார்.
மணமகன்ஜனார்தன் கூறியதாவது, எங்கள் குடும்பத்தினர் மீது உள்ள பகையால் எனது உறவினர்கள் இவ்வாறு செய்துள்ளார்.
இந்தப்புகார் குறித்து பொலிசார் முறைப்படி விசாரிக்காமல் என்னை கைது செய்யவந்தனர். இது எந்த வகையில்நியாயம் இதை நான் சட்டப்படிஎதிர் கொள்வேன் என கூறியுள்ளார்.





