வவுனியாவில் லங்கா சதொசவின் 2வது கிளை இன்று (24.04.2016) காலை 11.30 மணியளவில் நெளுக்குளத்தில் வெகுவிமர்சையாக கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிசாட் பதியுதீனால் திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர்கள், பொலிசார், நெளுக்குளம் கிராமசேவகர், அரச மற்றும் அரசார்பற்ற ஊழியர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.






