ஜடேஜாவின் வளர்ச்சி குறித்து ஆச்சரியப்படவில்லை : விராத் கோலி..!!

362

kohli

இந்திய அணியின் சகலதுறை வீரர் ரவீந்திர ஜடேஜாவின் வளர்ச்சி குறித்து ஆச்சரியப்படவில்லை என இந்திய அணியின் இளம் வீரர் விராத் கோலி தெரிவித்துள்ளார்.அத்தோடு ரவீந்திர ஜடேஜாவின் சகலதுறைப் பெறுபேறுகள் தொடர்பாக விராத் கோலி தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

அண்மையில் சிம்பாவேயில் இடம்பெற்ற தொடரில் ரவீந்திர ஜடேஜா சிறப்பாகச் செயற்பட்டதோடு ஒருநாள் சர்வதேசப் போட்டி பந்துவீச்சாளர்களின் தரப்படுத்தலில் முதலிடத்தையும் பெற்றுக் கொண்டார். அத்தொடரில் இந்திய அணிக்குத் தலைமை தாங்கிய விராத் கோலி இதற்காக ரவீந்திர ஜடேஜாவிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

ஜடேஜாவின் வளர்ச்சி குறித்து ஆச்சரியப்படவில்லை எனக் குறிப்பிட்ட விராத் கோலி சர்வதேசப் போட்டிகளில் ஜடேஜா சிறப்பான முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பாக ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அவர் சிறப்பான முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த ஒன்று இரண்டு வருடங்களில் பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜா மிகவும் சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்த விராத் கோலி அத்தோடு தேவையான நேரங்களில் துடுப்பாட்டத்திலும் சிறப்பான பங்களிப்புகளை வழங்கி வருவதாகக் குறிப்பிட்டார்.

உலகின் முதற்தர வீரராக ரவீந்திர ஜடேஜா தரப்படுத்தப்பட்டுள்ளது குறித்து மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்த விராத் கோலி அதற்காக மகிழ்ச்சியடைவதாகவும் குறிப்பிட்டார்.