5 மகள்களை கொடூரமாக கொன்ற தந்தைக்கு தூக்கு தண்டனை!!

424

hang

இந்திய மத்திய பிரதேச மாநிலத்தில் வறுமையால் தனது 5 மகள்களின் தலையை கொடூரமாக வெட்டி கொலை செய்த தந்தைக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் சேஹோர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மகன்லால் பரிலா. இவருக்கு 2 மனைவிகளும் லீலா(6), சவீதா(5), ஆர்த்தி(4), பூல் கன்வர்(2), ஜமுனா(1) என 5 மகள்களும் உள்ளனர்.

வறுமையின் பிடியில் இருந்த இவருக்கும் இவரது மனைவிகளுக்கும் இடையே 2010ம் ஆண்டு யூன் 11ம் திகதி சண்டை ஏற்பட்டது.
இதனால் கோபம் அடைந்த மகன்லால் கோடாரியை எடுத்து தனது 5 மகள்களின் தலையை வெட்டி கொலை செய்தார்.

இது தொடர்பான வழக்கில் மகன்லாலுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்பு தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் மகன்லால் தாக்கல் செய்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

மேலும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் மகன்லாலின் கருணை மனுவை கடந்த யூலை 22ம் திகதி நிராகரித்தார். இதனைத் தொடர்ந்து மகன்லாலுக்கு தூக்கு தண்டனையை ஓகஸ்ட் 8ம் திகதி நிறைவேற்ற சேஹோர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப்புக்கு கடந்த ஆண்டு நவம்பரில் தூக்கு தண்டனையை நிறைவேற்றியவர் ஜபல்பூர் மத்திய சிறையில் மகன்லாலை தூக்கிலிடுவார் என்று சிறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.