கிளிநொச்சி மக்களை வதைக்கும் கடும் வெப்பம் : 5 நிமிடங்களில் வீதியில் தயாரான ஒம்லெட்!!

610

Omle

கிளிநொச்சியில் தற்போது அதிக வெப்பநிலை 37 பாகை செல்சியஸ்க்கும் அதிகமாக காணப்படுவதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெப்பத்தின் வீரியத்தை வெளிப்படுத்தும் வகையில், அந்தப் பகுதியை சேர்ந்த ஒருவர், பரந்தன் முல்லை ஏ35 வீதியில் முட்டையை ஊற்றி ஒம்லெட் போட்டுள்ளார்.

தீவிரமடையும் வெப்ப நிலை மக்கள் மத்தில் பல சஞ்சலத்தை ஏற்படுத்தியதுடன். சிறுவர்கள், பெரியவர்கள் என பலரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

100 பாகை செல்சியஸ் ஒம்லெட் ஆகும் முட்டை சுமார் 5 நிமிடத்தில் ஏ35 தார் வீதியில், ஒம்லெட் ஆகினால் கிளிநொச்சி மக்களின் நிலைமை என்ன என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.