அமெரிக்காவில் ஒருவர் தனது வீட்டின் பின்புறத்தில் இருந்த மரத்தை வெட்டியுள்ளார்.இரண்டு துண்டுகளாக வெட்டிய மரத்தின் மையப்பகுதியில் பாதியாக அறுபட்ட நிலையில் வெளிவந்த பாம்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மரத்தின் மையத்தில் ‘வைரம்’ என்றழைக்கப்படும் நடுப்பகுதியில் இருந்து மண்ணொளியான் பாம்பைப்போல் கறுகறுவென வெளியாகும் அந்த தலையில்லா பாம்பை பார்த்தவுடன் அந்த மரத்தை வெட்டியவர் பயத்தில் கூச்சலிடும் வீடியோ யூடியூப்பில் வெளியாகி நான்கே தினங்களில் சுமார் 80 இலட்சம் மக்கள் பார்த்துள்ளனர்.