ராஜஸ்தானில் கொடூரம்: 5 வயது சிறுவன் தரையில் அடித்து கொலை, சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு!!

795

1 (67)

ராஜஸ்தானில் 5 வயது சிறுவன் கொடூரமாக தரையில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அங்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் 5 வயது சிறுவனை மர்ம நபர் ஒருவர் தரையில் அடித்துக் கொலை செய்து உள்ளான்.

இதுதொடர்பான சி.சி.டி.வி காட்சி வெளியாகியுள்ளது. சிறுவனை தூக்கி சென்று மர்ம நபர் தரையில் அடித்துக் கொன்று விட்டு செல்லும் காட்சி பதிவாகி உள்ளது.சிறுவன் தலையில் பலத்த காயத்துடன், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடக்கும் காட்சி பதபதைக்க செய்து உள்ளது. இதுதொடர்பாக சிறுவனின் பெற்றோர் பொலிசாரிடம் புகார் அளித்து உள்ளனர்.

பொலிசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சி.சி.டி.வி காட்சியை ஆய்வு செய்து, கொலையாளியை தேடிவருகின்றனர்.