பிரித்தானிய மகாராணிக்கு விண்வெளியில் இருந்து வந்த பிறந்த நாள் வாழ்த்து!!

678

1 (46)

விண்வெளியில் இருந்து பிரித்தானிய நாட்டை சேர்ந்த வீரர் ஒருவர் மகாராணியான இரண்டாம் எலிசபெத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துதெரிவித்து மகாராணியை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.பூமியில் இருந்து 386 கி.மீ தொலைவில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் அமைந்துள்ளது.

இந்த ஆய்வு மையத்தில் ரஷ்யாநாட்டை சேர்ந்த 3 வீரர்கள், அமெரிக்காவை சேர்ந்த 2 வீரர்கள் மற்றும் பிரித்தானிய நாட்டைசேர்ந்த ஒரு வீரர் என 6 வீரர்கள் தற்போது தங்கி ஆய்வுசெய்து வருகின்றனர்.பிரித்தானிய நாட்டு வரலாற்றிலேயே சர்வதேச ஆய்வு மையத்தில் டிம் பீக் என்ற அந்த விண்வெளி வீரர் தான் முதன் முதலாக அங்கு தங்கி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், பிரித்தானிய மகாராணியான இரண்டாம் எலிசபெத் கடந்த ஏப்ரல் 21ம் திகதி தனது 90-வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.விண்வெளியில்உள்ள டிம் பீக் தனதுநாட்டு மகாராணிக்கு பிறந்த நாள் வாழ்த்துசெய்தி அனுப்ப எண்ணி, ‘Happy Birthday Your Majesty’( மகிழ்ச்சியான பிறந்த நாள் வாழ்த்துகள்மகாராணி) என ஒரு அட்டையில்எழுதி அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அப்போது, ‘Science is Great Britain’(அறிவியல் என்றால் பிரித்தானியா தான்) என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்ட மேலாடையை அவர் அணிந்திருந்தார்.விண்வெளியில் இருந்து வந்த இந்த பிறந்தநாள் வாழ்த்து மகாராணிக்கு தெரிவிக்கப்பட்டதும், உற்சாகம் அடைந்த மகாராணி டி.பீக்கிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.இது மட்டுமின்றி, டிம் பீக் முதன்முதலாக கடந்த டிசம்பர் 15ம் திகதி விண்வெளியில் இறங்கியபோது, ‘God save thequeen’(கடவுளே, மகாராணியை ஆரோக்கியமாக வைத்திரு’என்ற தகவலை எழுதி டுவிட்டரில்வெளியிட்டார்.

இந்த தகவலை பார்த்த மகாராணியும்‘பிரித்தானிய நாட்டின் சார்பாக விண்வெளியில் ஆய்வுமேற்கொண்டு வரும் டிம் பீக்நமது ஒட்டுமொத்த விஞ்ஞானிகளுக்கும் ஒரு உந்து கோலாகஇருக்கிறார்’என வாழ்த்து செய்தியை அனுப்பியது குறிப்பிடத்தக்கது.