நான் எப்படி காதலில் விழுந்தேன்; அதிக விலைக்கு ஏலம்போன ராணியின் காதல் கடிதம்!!

451

queen_2199253b

‘நான் எப்படி காதலில் விழுந்தேன்’ என்ற தலைப்பில் பிரிட்டன் ராணி எழுதிய கடிதம் எதிர்பார்க்கப்பட்டதையும் விட 18 மடங்கு கூடுதல் விலைக்கு ஏலம் போனது.

பிரிட்டன் ராணியாக பதவிவகித்து வரும் இரண்டாம் எலிசபெத் ராணி, தனது 21 ஆவது வயதில் கடந்த 1947-ல் எழுதிய இரண்டு பக்க காதல் கடிதம், அவரது 90 ஆவது பிறந்த நாளையொட்டி, ஏலத்துக்கு விடப்பட்டது. அந்த கடிதம் 800 முதல் 1,200 பவுண்டுகள் வரை ஏலம்போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அனைவரது எதிர்பார்ப்பையும் மீறி 18,000 பவுன்டுகளுக்கு ஏலம் போனது.