படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற ஐவர் கைது..!

1575

vavuniyaஹுங்கம – கலமெட்டிய மீன்பிடி துறைமுகத்தின் ஊடாக படகு மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாவர்.

இவர்கள் பயணிக்கவிருந்த படகு பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட நிலையில் அதில் இருந்து அரசி, எரிவாயு சிலின்டர், பால்மா, மரக்கறி போன்றவை மீட்கப்பட்டுள்ளன.

நேற்று (08) காலை கைது செய்யப்பட்ட சந்தேகநகர்கள் மாலை அங்குனுகொலபெலஸ்ஸ நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது 2,50,000 ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

ஹுங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.