
நாளை 10ம் திகதி தொடக்கம் எதிர்வரும் 13ம் திகதி வரையான 3 நாட்களுக்கு எரிகல் பொழிவை தெளிவாக காணும் வாய்ப்பு இலங்கை மக்களுக்கு கிடைக்கவுள்ளது.
நாளைய தினம் மணித்தியாலத்திற்கு 15 எரிகற்களை காண முடியும் எனவும் அடுத்துவரும் நாட்களில் அது 50ஆக அதிகரிக்கக் கூடும் எனவும் இலங்கை கோள்மண்டலம் தெரிவித்துள்ளது.
பிரகாசத்துடன் பொழியும் எரிகற்களை கண்களால் தெளிவாக காண முடியும் என கோள்மண்டலம் குறிப்பிட்டுள்ளது.
மேகமூட்டமற்ற காலநிலை காணப்படுமாயின் நள்ளிரவு தொடக்கம் அதிகாலை வரை வானத்தின் ஈரான திசை பகுதியில் எரிகல் பொழியை காண முடியும்.





