மனைவியை வெட்டிக் கொன்று தானும் தற்கொலை செய்த கணவன்!!

515

Murder

பிங்கிரிய – உடவெல பிரதேசத்தில் மனைவியைக் கொலை செய்த கணவர் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குடும்பப் பிரச்சினை காரணமாக 36 வயதுடைய மனைவியை வெட்டிக் கொன்ற 52 வயதான குறித்த நபர் பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பிங்கிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.