இலங்கையில் மரண தண்டனையில் இருந்து தப்பிய 83 பேர்!!

282

Hang

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 83 கைதிகளுக்கு அதனை ஆயுள் தண்டனையாக மாற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதியளித்துள்ளார்.

நீதி அமைச்சினால் நியமிக்கப்பட்ட விஷேட குழுவினால் வழங்கப்பட்ட பணிப்புரைக்கு அமைய இந்த அனுமதி கிட்டியுள்ளதாக, சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 450க்கும் அதிகமான கைதிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் குறித்த குழு இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

எனவே, 83 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்குமாறு நீதி அமைச்சினால் ஜனாதிபதியிடம் யோசனை முன்வைக்கப்பட்டது.

இதற்கமைய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதி கிடைத்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.