தற்கொலை செய்து கொண்ட புதுமணத் தம்பதி!!

831

Sucide

திருப்பதி தேவஸ்தான விடுதி அறையில் புதியதாக திருமணம் செய்து கொண்ட ஆணும், பெண்ணும் அறை எடுத்து தங்கினர். இன்று காலை அவர்களது அறை திறக்கப்படாமல் இருந்தது.

சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் அறையை திறந்து பார்த்தனர். அப்போது மின்விசிறியில் சுடிதார் துப்பட்டாவால் அந்த ஆணும், பெண்ணும் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினர்.

இது குறித்து திருப்பதி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

தூக்கில் பிணமாக தொங்கிய பெண்ணின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த தாலிக் கயிறு புதியதாக இருந்தது. எனவே தற்கொலை செய்து கொண்ட 2 பேரும் புதுமண தம்பதிகளாக இருக்கலாம் என தெரிகிறது.

பொலிசாரின் முதல் கட்ட விசாரணையில் அவர்கள் கோவையை சேர்ந்த சம்பத்குமார் (வயது 25), சத்யவாணி (25) என்பது தெரியவந்துள்ளது.

அவர்கள் உண்மையில் திருமண தம்பதிகளா அல்லது தற்கொலைக்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா என்பது குறித்து தொடர்ந்து பொலிசார் விசாரணை நடாத்தி வருகின்றனர்.