இந்த வருடத்துக்குள் இரண்டு உள்ளூர் விமானத்தள அமைப்பு பணிகள் ஆரம்பம்!!

462

TLS-13th-June-Mattala-Rajapaksa-International-Airport-to-be-Developed-as-Aircraft-Repairing-Center

இலங்கையில் இரண்டு உள்ளுர் விமானத்தளங்களை நிர்மாணிக்கும் பணிகள் இந்த வருடத்தில்ஆரம்பிக்கப்படவுள்ளன.உள்ளூர் விமானசேவைகள் அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

இதன்படி பண்டாரவளை மற்றும் பாலாவி ஆகிய இடங்களில் விமான நிலையங்கள் அமையவுள்ளனஇதன் ஒருக்கட்டமாக அமைச்சர் நிமால் சிறிபால நேற்று விமான நிலையம் அமைக்கப்படவுள்ளபண்டாரவளை நாயபெத்த பெருந்தோட்ட பகுதிக்கு விஜயம் செய்தார்.இந்த விமானத்தளம் 1.5 கிலோதமீற்றர் தூரத்தையும் 20 மீற்றர் அகலத்தையும்கொண்டதாகவும் அமையவுள்ளது.

இதற்காக 1.3பில்லியன் ரூபாய்கள் செலவிடப்படவுள்ளன. இந்தநிலையில் நிர்மாணம் இந்த வருடத்துக்குள் முடிக்கப்படும் என்றுஎதிர்ப்பார்க்கப்படுகிறது.விமானத்தளத்துக்காக 75 ஏக்கர் நிலம் சுவீகரிக்கப்பட்டுள்ளது.ஓடுபாதையின் தன்மைக்கு ஏற்ப இந்த விமானத்தளத்தில் 45 பேரைக்கொண்ட விமானம்தரையிறங்க முடியும்.

முன்னதாக இந்த விமானத்தளம் ஹப்புத்தளையில் அமைக்கப்படவிருந்தபோதும்தொழில்நுட்பக் காரணங்களால் பின்னர் அது பண்டாரவளைக்கு மாற்றப்பட்டது.பண்டாரவளை, பாலாவியை தவிர கண்டி மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களிலும் உள்ளூர் விமானத்தளங்கள் அமைக்கப்படவுள்ளன.