வவுனியா வேப்பங்குளம் பகுதியில் வவுனியா திருச்சிலுவை கன்னியர் மடத்திற்கான நிரந்தர வதிவிடக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (27.04.2016) காலை திருச்சிலுவை கன்னியர் மட மாகாணத் தலைவி அருட்சகோதரி கிளையா சுவானி அவர்களின் இறை ஆசியோடு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வேப்பங்குளம் தூய சூசையப்பர் ஆலய பங்குத்தந்தை அருட்பணி அ.லக்ஸ்ரன் டி சில்வா திருச்சிலுவை கன்னியர் மட மாகாண ஆலோசகர், மற்றும் வேப்பங்குளம் திருச்சிலுவை கன்னியர் மடம் அருட்சகோதரிகள் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தனர்.






