தைவான் நாட்டில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கையில் குழந்தையுடன் இருக்கும் தாயின் படிமத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த படிமம் சுமார் 4800 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
தைவானின் மத்திய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட 48 மனித படிமங்களில் இதுவே முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதுகுறித்து இயற்கை அறிவியல் தைவான் தேசிய கண்காட்சியக மானிடவியல் துறை ஒரு பொறுப்பாளர் சூ வெய் லீ கூறுகையில், இதனை தோண்டி எடுத்த போது அனைவரும் ஆச்சரியம் அடைந்தோம் என்றும், தாய் தன் கையில் இருக்கும் குழந்தையை பார்ப்பது போன்று படிமம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.