யாழ்ப்பாண மாணவனும் கேரள மாணவியும் இராமேஸ்வரம் பொலிஸில் சரண்

720

police

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புலம்பெயர் மாணவர் ஒருவரும் கேரளாவைச் சேர்ந்த மாணவியும் இராமேஸ்வரத்தில் உள்ள மகளிர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

19 வயதான ஸ்டெபி எங்கெஸ் என்ற மாணவியும், 20 வயதான கஜேந்திரன் என்ற இலங்கைத் தமிழ் மாணவனும் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக பல் மருத்துவ கல்லூரியில் பயில்கின்றனர்.

இந்தநிலையில் இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்த நிலையில், அண்மையில் பழனி முருகன் கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

எனினும் குறித்த மாணவியின் தந்தையான இராணுவ அதிகாரி தமது மகளைக் காணவில்லை என்று பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து தமது பெற்றோரால் தங்கள் இருவருக்கும் பிரச்சினை ஏற்படும் என்ற அச்சத்திலேயே தாம் இருவரும் சரணடைந்ததாக கேரள மாணவி இராமேஸ்வரம் மகளிர் பொலிஸில் முறையிட்டுள்ளார்.