தேசிய கிரிக்கெட் தெரிவுக்குழுத் தலைவராக மீண்டும் சனத் ஜயசூரிய நியமனம்!!

445

Sanath

இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் முத்திரை பதித்த ஒருவரான சனத் ஜயசூரிய மீண்டும் தேசிய கிரிக்கெட் தெரிவுக்குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நால்வர் கொண்ட இலங்கை தேசிய கிரிக்கெட் தெரிவுக் குழுவை விளையாட்டுத்துறை அமைச்சர் நியமித்ததாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்தது.

சனத் ஜயசூரிய தலைவராகவும், முன்னாள் டெஸ்ட் வீரர்களான ரொமேஷ் களுவிதாரண, ரஞ்சித் மதுரசிங்க, எரிக் உபசாந்த ஆகியோர் புதிய தெரிவுக்குழுவின் உறுப்பினர்களாகவும் பெயரிடப்பட்டுள்ளனர்.

இந்த புதிய தெரிவுக்குழு எதிர்வரும் முதலாம் திகதியுடன் கடமைகளை ஆரம்பிக்கும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனத் ஜயசூரிய 2013 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவராக செயற்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.